பெப்ரவரி 10 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்
பெப்ரவரி 10 (February 10) கிரிகோரியன் ஆண்டின் 41 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 324 (நெட்டாண்டுகளில் 325) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்:
1258 – மங்கோலியப் படையெடுப்பால் பகுதாது வீழ்ந்தது; அப்பாசியக் கலீபகம் அழிக்கப்பட்டு இசுலாமியப் பொற்காலம் முடிவுக்கு வந்தது.
1355 – ஆக்சுபோர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே ஏற்பட்ட கலவரத்தில் 90-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1567 – ஸ்காட்லாந்து அரசி முதலாம் மேரியின் கணவர் டார்ன்லி பிரபு எடின்பரோ குண்டுவெடிப்பில் உயிரிழந்தார்.
1763 – பாரிசு உடன்படிக்கையின்படி பிரான்சு கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திடம் ஒப்படைத்தது.
1798 – உரோமைக் கைப்பற்றிய லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர், அதனை ஒரு குடியரசாக அறிவித்தார்.
1815 – கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியப் படைகள் கண்டியினுள் நுழைந்தன.
1840 – ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா மகாராணி இளவரசர் ஆல்பேர்ட்டைத் திருமணம் புரிந்தார்.
1846 – முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர்: சோப்ரான் போரில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி வெற்றி பெற்றது.
1897 – மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1940 – சோவியத் ஒன்றியம் தாம் கைப்பற்றிய கிழக்குப் போலந்து மக்களை சைபீரியாவுக்கு நாடு கடத்தியது.
1947 – இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகளுக்கும் இத்தாலி, அங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே பாரிசு அமைதி உடன்பாடுகள் கையெழுத்தாயின.
1948 – இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இளவரசர் என்றியினால் திறந்து வைக்கப்பட்டது.
1962 – பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது அமெரிக்க மற்றும் சோவியத் உளவாளிகளின் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.
1969 – மு. கருணாநிதி முதன்முறையாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1972 – ரசு அல்-கைமா அமீரகம் ஐக்கிய அரபு அமீரகத்துடன் (UAE) ஏழாவது நாடாக இணைந்தது.
1991 – வன்னி மீதான இலங்கை இராணுவத்தின் ‘வன்னி விக்கிரம’ படையெடுப்பு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.
1996 – ஐபிஎம்-இன் ‘டீப் புளூ’ (Deep Blue) கணினி உலக சதுரங்க வீரர் காரி காஸ்பரோவை வீழ்த்தியது.
2007 – பராக் ஒபாமா தான் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
2009 – விண்வெளியில் இரண்டு தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மோதி அழிந்தன.
2013 – அலகாபாத் கும்பமேளா திருவிழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்:
1775 – சார்லஸ் லாம், புகழ்பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் மற்றும் கவிஞர்.
1805 – குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா, கேரளக் கத்தோலிக்கப் புனிதர்.
1890 – போரிஸ் பாஸ்ரர்நாக், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர்.
1902 – வால்டர் பிராட்டன், டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர்.
1919 – சு. ராஜம், தமிழக ஓவியர், நடிகர் மற்றும் இசைக்கலைஞர்.
1929 – நாஞ்சில் கி. மனோகரன், தமிழக அரசியல்வாதி.
1952 – லீ சியன் லூங், சிங்கப்பூரின் 3-வது பிரதமர்.
1984 – அல்போன்சு புத்திரன், இந்தியத் திரைப்பட இயக்குநர் (பிரேமம் படப்புகழ்).
1985 – மகதி, தமிழகக் கருநாடக இசைப் பாடகி.
இறப்புகள்:
1837 – அலெக்சாந்தர் பூஷ்கின், நவீன உருசிய இலக்கியத்தின் தந்தை எனப்படுபவர்.
1865 – ஹைன்ரிக் லென்ஸ், ‘லென்ஸ் விதியை’ உருவாக்கிய இயற்பியலாளர்.
1923 – வில்லெம் ரோண்ட்கன், எக்ஸ்-கதிர்களைக் கண்டுபிடித்து முதல் நோபல் பரிசு பெற்றவர்.
1953 – என். கோபாலசாமி அய்யங்கார், இந்திய அரசியல்வாதி.
2001 – கே. தவமணி தேவி, இலங்கை-இந்தியத் திரைப்பட நடிகை.
2005 – ஆர்தர் மில்லர், புகழ்பெற்ற அமெரிக்க நாடகாசிரியர்.
2020 – சிசு நாகேந்திரன், இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர்.
சிறப்பு நாள்:
குருதிய எழுத்தாளர் ஒன்றிய நாள் (ஈராக்கிய குர்திஸ்தான்).
தகவல் உதவி: விக்கிப்பீடியா