நாசா பொது மக்களுக்கு வழங்கும் விசேட சந்தர்ப்பம்!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA), தனது அடுத்தகட்ட நிலவு பயணமான ‘ஆர்ட்டெமிஸ் II’ திட்டத்தில் பொதுமக்களையும் ஒரு அங்கமாக மாற்றும் வகையில் ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் நிலவுக்குப் பயணம் செய்யவுள்ள விண்கலத்தில், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் பெயர்களை நிலவுக்கு அனுப்ப நாசா அழைப்பு விடுத்துள்ளது.
இத்திட்டத்தின் சுவாரஸ்யமான அம்சங்கள்:
👉 பெயர்களைச் சேமித்தல்: விண்ணப்பிக்கும் நபர்களின் பெயர்கள் அனைத்தும் ஒரு சிறிய எஸ்டி கார்டில் (SD Card) சேமிக்கப்பட்டு, ‘ஓரியன்’ (Orion) விண்கலத்தின் மூலம் நிலவுக்குக் கொண்டு செல்லப்படும்.
👉 டிஜிட்டல் போர்டிங் பாஸ்: இதில் பங்கேற்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு நினைவுப் பொருளாக, அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட ‘டிஜிட்டல் போர்டிங் பாஸ்’ ஒன்றை நாசா வழங்குகிறது.
👉 பதிவு செய்வதற்கான காலக்கெடு: இதற்கான பதிவுகள் எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன.
சுமார் 10 நாட்கள் நீடிக்க உள்ள இந்தச் சோதனைப் பயணத்தில், நான்கு விண்வெளி வீரர்கள் நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்ய உள்ளனர். அவர்கள் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க மாட்டார்கள் என்ற போதிலும், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் மற்றும் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் திட்டங்களுக்கு இது ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது.
🤔 பதிவு செய்வது எப்படி?
விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ளவர்கள் நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான go.nasa.gov/49NQ4mf மூலம் உங்கள் பெயர்களை இலவசமாகப் பதிவு செய்து டிஜிட்டல் போர்டிங் பாஸைப் பெற்றுக்கொள்ளலாம்.