பெப்ரவரி 14 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்
பெப்ரவரி 14 (February 14) கிரிகோரியன் ஆண்டின் 45 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 320 (நெட்டாண்டுகளில் 321) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்:
1014 – இரண்டாம் என்றி புனித உரோமைப் பேரரசராக திருத்தந்தை எட்டாம் பெனடிக்டினால் முடிசூட்டப்பட்டார்.
1400 – இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சார்டு மன்னர் காலமானார் (பட்டினியால் இறந்ததாக நம்பப்படுகிறது).
1556 – பேரரசர் அக்பர் முகலாயப் பேரரசராக முடிசூடினார்.
1779 – அவாயில் ஆதிவாசிகளால் புகழ்பெற்ற நாடுகாண் பயணி ஜேம்ஸ் குக் கொல்லப்பட்டார்.
1815 – கண்டிப் போர்கள்: கண்டி இராச்சியத்தைப் பிரித்தானியர் முழுமையாகக் கைப்பற்றினர்.
1859 – ஓரிகன் ஐக்கிய அமெரிக்காவின் 33-வது மாநிலமாக இணைந்தது.
1876 – அலெக்சாண்டர் கிரகம் பெல் மற்றும் எலீசா கிறே இருவரும் தொலைபேசிக்கான காப்புரிமைக்கு தனித்தனியாக விண்ணப்பித்தனர்.
1899 – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) அமெரிக்கத் தேர்தல்களில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
1918 – சோவியத் ஒன்றியம் கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக்கொண்டது.
1924 – கணினி உலகின் ஜாம்பவான் நிறுவனமான IBM (International Business Machines) அமைக்கப்பட்டது.
1929 – சிக்காகோவில் வேலண்டைன் நாளன்று அல் கபோனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
1946 – இங்கிலாந்து வங்கி தேசியமயமாக்கப்பட்டது.
1949 – இசுரேலிய நாடாளுமன்றம் (Knesset) முதற்தடவையாகக் கூடியது.
1966 – அவுஸ்திரேலிய டொலர் (AUD) அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1987 – தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி சேவை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
1989 – உலகெங்கும் பயன்படுத்தப்படும் GPS திட்டத்தின் முதலாவது செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
1989 – சல்மான் ருஷ்டிக்கு ‘சாத்தானின் கவிதைகள்’ நூலுக்காக ஈரான் தலைவர் கொமெய்னி மரண தண்டனை விதித்தார்.
1990 – வொயேஜர் 1 விண்கலம் பூமியை எடுத்த புகழ்பெற்ற புகைப்படம் வெளிர் நீலப் புள்ளி (Pale Blue Dot) உருவானது.
1998 – கோயம்புத்தூர் தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் கொல்லப்பட்டனர்.
2005 – கல்லூரி மாணவர்கள் சிலரால் YouTube முதன்முதலில் தொடங்கப்பட்டது.
2017 – செயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட நால்வர் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2019 – புல்வாமா தாக்குதல்: காசுமீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 45 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
பிறப்புகள்:
1483 – பாபர், முகலாயப் பேரரசைத் தோற்றுவித்தவர்.
1869 – சார்ல்ஸ் தாம்சன் ரீசு வில்சன், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர்.
1901 – பி. சாம்பமூர்த்தி, தமிழக இசையியல் அறிஞர்.
1914 – இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி, மிருதங்கக் கலைஞர்.
1933 – மதுபாலா, புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை.
1952 – சுஷ்மா சுவராஜ், இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர்.
1990 – தீக்ஷா செத், தென்னிந்தியத் திரைப்பட நடிகை.
இறப்புகள்:
269 – புனித வேலண்டைன், உரோமைக் கத்தோலிக்க புனிதர்.
1405 – தைமூர், துருக்கிய-மங்கோலியப் பேரரசர்.
1779 – ஜேம்ஸ் குக், ஆங்கிலேயக் கப்பற் தளபதி.
1968 – அ. ந. கந்தசாமி, ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்.
1995 – யு நூ, பர்மாவின் முதலாவது பிரதமர்.
2005 – ரஃபீக் அரீரி, லெபனானின் முன்னாள் பிரதமர்.
சிறப்பு நாள்:
வேலன்டைன் நாள் (காதலர் தினம்).
தகவல் உதவி: விக்கிப்பீடியா