பெப்ரவரி 7 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்
பெப்ரவரி 7 (February 7) கிரிகோரியன் ஆண்டின் 38 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 327 (நெட்டாண்டுகளில் 328) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்:
457 – பைசாந்தியப் பேரரசராக முதலாம் லியோ பதவியேற்றார்.
1301 – எட்வர்டு (பின்னர் இங்கிலாந்தின் இரண்டாம் எட்வர்டு மன்னர்) முதலாவது ஆங்கிலேய வேல்சு இளவரசரானார்.
1807 – நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் உருசிய மற்றும் புருசியப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கின.
1812 – அமெரிக்காவின் மிசோரி மாநிலம் நியூ மாட்ரிட் பகுதியில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
1819 – சேர் இசுடாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூரின் பொறுப்பை வில்லியம் பார்க்கூகாரிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினார்.
1845 – இலங்கை அரச ஆசியர் சமூகத்தின் (Royal Asiatic Society) இலங்கைக் கிளை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.
1863 – நியூசிலாந்து ஆக்லாந்து கரையில் ‘ஓர்ஃபியசு’ கப்பல் மூழ்கியதில் 189 பேர் உயிரிழந்தனர்.
1904 – அமெரிக்காவின் பால்ட்டிமோரில் ஏற்பட்ட பெருந்தீயினால் 30 மணி நேரத்தில் சுமார் 1,500 கட்டடங்கள் அழிந்தன.
1951 – கொரியப் போர்: தென்கொரியப் படைகளால் 700-க்கும் அதிகமான கம்யூனிச ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1962 – கியூபாவுடனான அனைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தடைகளை ஐக்கிய அமெரிக்கா அமல்படுத்தியது.
1967 – ஆத்திரேலியாவின் தாசுமேனியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 62 பேர் உயிரிழந்தனர்.
1971 – சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
1974 – ஐக்கிய இராச்சியத்திடமிருந்து கிரெனடா விடுதலை பெற்றது.
1977 – சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது.
1979 – புளூட்டோ கோள் நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.
1986 – எயிட்டியில் 28 ஆண்டுகால குடும்ப ஆட்சியை நடத்திய ஜீன்-குளோட் டுவாலியர் நாட்டை விட்டு வெளியேறினார்.
1990 – சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி தனது தனி ஆதிக்கத்தைக் கைவிட ஒப்புக்கொண்டது.
1992 – ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ‘மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம்’ கையெழுத்திடப்பட்டது.
1999 – உலகத் தமிழிணைய மாநாடு சென்னையில் விமரிசையாகத் தொடங்கியது.
2005 – விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு – அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட நால்வர் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
2009 – ஆத்திரேலியாவின் விக்டோரியா மாநில காட்டுத்தீயினால் 173 பேர் உயிரிழந்தனர்.
2012 – மாலைத்தீவுகளில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து அரசுத்தலைவர் முகம்மது நசீது பதவியிலிருந்து விலகினார்.
2013 – அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலம் அடிமை முறையை ஒழிக்கும் சட்டத்தை அதிகாரபூர்வமாக அமுல்படுத்தியது.
பிறப்புகள்:
1478 – தாமஸ் மோர், புகழ்பெற்ற ஆங்கிலேய மெய்யியலாளர்.
1766 – பிரடெரிக் நோர்த், இலங்கையின் முதலாவது பிரித்தானிய தேசாதிபதி.
1812 – சார்லஸ் டிக்கின்ஸ், உலகப் புகழ்பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர்.
1824 – வில்லியம் ஹக்கின்ஸ், ஆங்கிலேய வானியலாளர்.
1877 – ஜி. எச். ஹார்டி, இந்தியக் கணித மேதை ராமானுஜத்தை உலகிற்கு அடையாளம் காட்டிய ஆங்கிலேயக் கணிதவியலாளர்.
1902 – தேவநேயப் பாவாணர், ‘மொழிஞாயிறு’ என்று போற்றப்படும் மிகச்சிறந்த தமிழறிஞர்.
1934 – ஆ. மாதவன், கேரளத் தமிழ் எழுத்தாளர் (சாகித்திய அகாதமி வெற்றியாளர்).
1940 – டோனி டேன் கெங் யம், சிங்கப்பூரின் 7-வது குடியரசுத் தலைவர்.
1979 – தவக்குல் கர்மான், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற யேமன் ஊடகவியலாளர்.
இறப்புகள்:
1878 – ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை).
1937 – சுவாமி அகண்டானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்.
1986 – ஏ. ஜி. சுப்புராமன், தமிழக அரசியல்வாதி.
2001 – பகீரதன், தமிழக எழுத்தாளர்.
2008 – குணால், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்.
சிறப்பு நாள்:
விடுதலை நாள் (கிரெனடா).
தகவல் உதவி: விக்கிப்பீடியா