100 மி.மீ வரை வெளுத்து வாங்கப்போகும் மழை!

100 மி.மீ வரை வெளுத்து வாங்கப்போகும் மழை! 12 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை!

இன்றைய தினம் (21 பெப்ரவரி 2026) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட முன்னறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

100 மி.மீ மிக பலத்த மழை பெய்யக்கூடிய பகுதிகள்:
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான சூழல் காணப்படுகிறது. குறிப்பாக பின்வரும் இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான மிக பலத்த மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளது:

  • மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள்.

  • மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்கள்.

ஏனைய பகுதிகளின் நிலை:
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். அந்த இடங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டையிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

பனிமூட்டமான காலைப்பொழுது:
அதிகாலை வேளையில் மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்:
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!