டி-20 உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணியுடன் இணையும் லசித் மாலிங்க!

டி-20 உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணியுடன் மீண்டும் இணையும் லசித் மாலிங்க!

எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐசிசி ஆண்கள் டி-20 உலகக் கிண்ணத் தொடருக்காக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக ஜாம்பவான் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்பச் சுற்றுக்கான விசேட பணி:

இலங்கை அணி உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்பச் சுற்றில் பங்கேற்கவுள்ள நான்கு முக்கிய போட்டிகளுக்காகவே மாலிங்கவின் சேவை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. குறிப்பாக இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்குத் தந்திரோபாய ஆலோசனைகளை வழங்குவதே இவரது முதன்மையான பணியாகும்.

அணியுடன் இணையும் திகதி:

லசித் மாலிங்க எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி இலங்கை அணியுடன் உத்தியோகபூர்வமாக இணையவுள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இலங்கை குழாமில் மதீஷ பத்திரண மற்றும் துஷ்மந்த சமீர போன்ற பலமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள நிலையில், மாலிங்கவின் வருகை பந்துவீச்சுப் பிரிவிற்குப் கூடுதல் பலத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணி தனது முதல் போட்டியில் பெப்ரவரி 8 ஆம் திகதி அயர்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!